
1.
நீங்கெல்லாம் சேத்துல
நீங்கெல்லாம் சேத்துல
கையைவச்சாத்தா நாங்கெல்லாம்
சோத்துல கையவைக்க முடியும்னு சொல்லுறான்
கூத்துல பொறங்தவன்.
எலேய் !
சேத்துல கைய வச்சதால
எங்க கையெல்லாம் எரிஞ்சிகிட்டிருக்கு
சூத்துலகைய வச்சதால
உங்க கையெல்லாம் சொறிஞ்சிகிட்டிருக்கு.
2.
ஒருதுளி வியர்வைக்கு
ஒருதுளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ்ல்லவா...
- திரைப்படப்பாடல்
எட்டு வயசுப் புள்ள ஒட்டின தீப்பெட்டில
ஒண்ணு,ரெண்டு ஒழுங்கா ஒட்டுலைனு
ஒரு நா(ள்) கூலியபுடிச்சிட்டுத் தர்ரானுக
கூறுகெட்ட கூ....யானுக.
3.
ஒவ்வொரு மாதத்தின்
ஒவ்வொரு மாதத்தின்
முதல் சனிக்கிழமை இரவில் துவங்குகிறது
இந்த திருப்பள்ளி எழுச்சி
வில்ஸ் புகையில் சுக்கா வாசம் மிதக்கும்
நிறம் மாறி இருக்கும்
குளிர்பானம் ஊற்றப்பட்ட சரக்கு
வீட்டுக்காரக் கிழவியின்
குறட்டை தாண்டி உள்ளறைக்குள்
வந்து சேரும் மெட்டியணிந்த இருபாதம்
விளக்கணைக்கப்பட்ட உள் அறைக்குள்
ஒ
ன்
ற
ன்
பி
ன்
ஒ
ன்
றா
ய்
உருவங்கள்
அதிகலையில் கேட்டது அந்தக் குரல்
எம் புள்ள மாதிரி இருக்கீங்க..
ஒருபத்து ரூவா சேத்துக்குடுங்க..
4.
குண்டி காய்ஞ்சுகிடக்கிற ஊருக்குள்ள
4.
குண்டி காய்ஞ்சுகிடக்கிற ஊருக்குள்ள
எண்ணைக் கிணறு தவிர
எல்லா இடத்திலேயும் குண்டப் போடுறானுகளேன்னு
நா பொலம்புறத கேட்டு
அப்பாத்தா சொன்னா
"இவனுங்களத்தா நம்மூர்ல
பொணம் விழுந்த வூட்டுலயும் பொம்பளைக்கு
அலையறவுனு சொல்லுவாங்க".
5.
கட்டுன பொண்டாடிய
கட்டுன பொண்டாடிய
காசுக்காக கண்டவன்கிட்ட
உட்டுட்டு அப்புறம்
அரிப்பெடுக்கறப்போ
காசுகொடுத்துபோன கதையா இருக்கு
அரசாங்க சொத்த அடுத்தவனுக்கு விக்கிறதும்
அவன் கிட்டேயே கடன் கேட்கிறதும்.
6.
குளித்துவிட்டு
குளித்துவிட்டு
கோவிலுக்குள் வரச் சொல்லியிருக்கிறாய்
சரி
எங்களையும் விடச் சொல்
எல்லோரும் குளிக்கிற குளத்தில்.
7.
தங்கச்சி குளிக்க
தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்டவக்கில்ல
தாயோளி!
செங்கல்ல தூக்கிட்டுபோறான்
கோயில் கட்ட.
8.
குருடன் பார்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்
பிராத்தனை கூட்டத்திற்குப்போக முடியாமல்
மூட்டு வலியால் படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்.
9.
சோறாக்க இருக்கற சட்டிய
9.
சோறாக்க இருக்கற சட்டிய
விக்கும்போது இளிச்சிட்டு
சதவிகிதத் தட்டோடு சாப்பாடு கேட்கிற
சாதித் தலைவனுக்கு
சரியான பேரு
எச்சகலை..
10.
மாதவிலக்கின் மஞ்சள் துணி மேல்
மாதவிலக்கின் மஞ்சள் துணி மேல்
விந்துக்கறை போல்
உந்தன்கவிதை.
எந்த பயனும் இல்லாமல்.
(குறிப்பு : உன் அரிப்பு தீர்ந்திருக்கும்)
வாழ்பானுபவ கவிகளுக்கு...
11.
உனக்கு சொரணைஇருக்கிறத?
11.
உனக்கு சொரணைஇருக்கிறத?
என்று கேட்டு விட்டான்.
இருக்கிறது என்று சொல்ல முடிவதில்லை.
எல்லாவற்றயும் பார்த்து
கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதால்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in