ஈழ பிரச்சனைக்காக ஈழத்தமிழர் நல உரிமை பேரவை சார்பாக பதினொன்றாம் தேதி கோவையில் பேரணி, பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் என்றாலே பிளக்ஸ் போர்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. பிரச்சனையை பற்றி போர்டில் இருக்கிறதோ இல்லையோ. தங்கள் முகம் பிரச்சாரமாக வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கும் உடன் பிறப்புகள் போட்டி போட்டு பிளக்ஸ் போர்டுகளால் தெருவை நிறைக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் ஈழத்தில் கண்ணீரோடும், கதறலோடும் போராடிக்கொண்டிருக்கிற மக்களுக்கான இந்தப் பேரணியில் திரும்பிய திசையெல்லாம் வைத்திருக்கிற பிளக்ஸிகளில் முத்துவேலர் பேத்தி முத்துப்பல் தெரிய கவிப்புன்னகை புரிகிறார். ஒரு எரியும் பிரச்சனைக்காக பேரணி, பொதுக்கூட்டம் நடத்துபவர்கள் அந்த பிரச்சனையின் தன்மைக்கேற்ற பிளக்ஸ் போர்டுகளை, படங்களை கூட தெரிவு செய்ய தெரியாதவர்கள் எனில் இவர்களுக்கு இந்த பிரச்சனை பற்றிய அக்கறை எவ்வளவு? இவர்களின் இந்த போராட்டம் அதன் ஆத்மர்த்தம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment